நோர்வேக்குப் புறப்பட்டார் ரணில் – லண்டனுக்கும் செல்கிறார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நேற்றிரவு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஒஸ்லோவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹேஷா விதானகே, கவிந்த ஜெயவர்த்தன ஆகியோரும், நோர்வேக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க், நோர்வேயின் மேல்சபை தலைவர் ரோன் வில்ஹெல்ம்சென், வெளிவிவகார அமைச்சர் இனே றிக்சென் சொரெய்ட் ஆகியோரையும் சிறிலங்கா பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நோர்வே பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!