பத்து பெண்களை கொலை செய்த தம்பதியினர்- மெக்சிக்கோவில் அதிர்ச்சி குற்றம்

பத்து பெண்களை கொலை செய்து அவர்களில் ஒருவரின் குழந்தையை விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தில் தம்பதியொன்றை மெக்சிக்கோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறிப்பிட்ட தம்பதியினரை பல நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த பொலிஸார் அவர்கள் வீடொன்றிலிருந்து அவர்கள் குழந்தைகளி;ற்கான தள்ளுவண்டியுடன் வெளியே வரும்போது கைதுசெய்துள்ளனர்.

தம்பதியினரிடமிருந்து மீட்கப்பட்ட தள்ளுவண்டிக்குள் உடல் பாகங்கள் காணப்பட்டன அவற்றை புதைக்கும் நோக்கில் அவர்கள் கொண்டு சென்றமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தம்பதியினரிடம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து மேலும் பல உடற்பாகங்களை கண்டுபிடித்துள்ளோம் அவை மிகமோசமான நிலையில் காணப்படுகின்றன இதன் காரணமாக தடயவியல் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 பெண்களை தாங்கள் கொலை செய்ததை தம்பதியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட பெண்ணொருவரின் குழந்தையை இன்னொரு குடும்பத்திற்கு விற்றுள்ளதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மெக்சிக்கோ நகரத்திற்கு வடக்கில் உள்ள எகடெபெக்கில் காணாமல் போன மூன்று பெண்களுடன் இந்த தம்பதியினருக்கு தொடர்பிருந்தமை தெரியவந்ததை தொடர்ந்தே இவர்களை கண்காணிக்க தொடங்கினோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!