இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்து ஒன்று மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டது. இன்று காலை பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலும், காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுமே ஒரே பாதையில் பயணித்துள்ளமையினால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. எனினும் ரயில்வே ஊழியர்களின் அவசரமாகச் செயற்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக இந்தப் பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!