கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது – போப் பிரான்சிஸ்

வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இன்று பக்தர்களிடையே தோன்றி சொற்பொழிவாற்றினார்.

வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயலாகும். ஒரு மனித உயிரிடம் இருந்து விடுபடுவது என்பது, ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு மற்றவரை ஆள்வைத்து கொல்வதைப் போன்றதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!