யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்ற தமிழ் பொலிஸ் கைது! – காட்டிக் கொடுத்தார் தாயார்

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை அவரது தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கைது செய்தோம் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கொன்ஸ்டபிளாகக் கடமையாற்றுகிறார். விசாரணைகளின் பின் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

தனது மகன் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் பொம்மைவெளிப் பகுதியில் நடமாடுகிறார் என்று சந்தேகநபரின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!