உகண்டா நிலச்சரிவில் சிக்கி இது வரை 34 பேர் பலி!!!

உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உகாண்டாவிற்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன.

இக் கோர சம்பவத்தால் 34 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் முழுமையடைந்த பின்னரே முழுமையான சேத விபரத்தை வெளியிட முடியும் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!