பெண்ணினால் பாலியல் தொல்லைக்குட்படத்தப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை!!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 38 வயது குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பார்பானி நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 38 வயதான குடும்பஸ்தரே நேற்று முன் தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சடலத்திற்கருகில் குறித்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது கைபட எழுதிய கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கடிதத்தில்

தன்னுடன் பணியாற்றும் பெண் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அவருடன் தகாத உறவிற்கு வற்புறுத்துவதாகவும் மறுப்பு தெரிவித்தால் பொலிஸில் தனக்கெதிராக பாலியல் முறைப்பாடு செய்யப் போவதாக மிரட்டுவதாகவும் எழுதியுள்ளார்.

கடிதத்தை உயிரழந்தவரின் இறுதி வாக்குமூலமாக கருதி குறித்த பெண் மீது தற்கொலைக்கு தூண்டுதல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!