அரசாங்கத்துக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன ; கெஹெலிய

இந்திய புலனாய்வு அமைப்பான ரோ தன்னை கொலை செய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளிவரும் செய்திகள் தொடர்பில், அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்திலிருந்து அரசாங்கத்துக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பாக தி இந்து பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி மற்றும் அது தொடர்பாக முன்சைக்கப்பட்டும் கருத்துக்கள் குறித்து பொது எதிரணியில் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!