பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் ஸுக்கர்பெர்க்கை நீக்க முன்மொழிவு!

அனைவராலும் அதிவேகமாகவும் விருப்பத்திற்கு உள்ளாகின்ற சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக், கடந்த 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மார்க் ஸுக்கர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் ஆரம்பிக்கப்பட பேஸ்புக் நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழுகின்றது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

அதாவது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு, கேம்பிரிட்ஜ் அனலடிகா சர்ச்சை என அடுத்தடுத்த சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியதால், அந்நிறுவனம் தற்போது கடும் நெருக்கடிக்குள்ளானது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர்(CEO) மார்க் ஸுக்கர்பெர்க்கை அந்த பதலியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவை, அந்நிறுவனத்தில் பொது பங்குகளை கொண்டுள்ள பங்குதாரர்கள் தற்போது இந்த முன்மொழிவை கொண்டு வந்துள்ளனர். சில முறைகேடுகளை பேஸ்புக் முறையாக கையளவில்லை என கூறி மார்க் ஜுக்கர்பெர்க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த வரும்(2019) மே மாதம் நடைபெறும் பேஸ்புக்கின் ஆண்டுக்கான பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த முன்மொழிவு வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவில் பேஸ்புக்கின் தலைவர்(CEO) பதவி, தன்னிச்சையான பதவியாக இருக்க வேண்டும் என்ற சட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், மார்க் ஸுக்கர்பெர்க்கு எதிராக முன்மொழிவு கொண்டு வரப்படுகின்றமை குறித்து, பேஸ்புக் நிறுவனம் எந்த கருத்தையும் தற்போது வெளியிடவில்லை. இந்த நிலையில், மார்க் ஸுக்கர்பெர்க் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்கு சக்தியை தன்னிடமே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!