கொலம்பியா மண்சரிவில் 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி ; பலர் மாயம்

கொலம்பியாவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளதோடு. பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மெக்சிகோ மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவிக்கையில், ”கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பாரம்கேபர்மேஜா நகரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

அவர்களின் உடல்கள் நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டன. இறந்தவர்களில் 5 பேர் சிறுவர்கள். மேலும் இந்த மண்சரிவில் பலர் மாயமாகியுள்ள்னர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் ஏற்பட்ட கனமழை காரணமாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஏராளமான வீடுகள் புதைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே போல் கடந்த வருடம் கனமழை காரணமாக கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!