“அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல்மோசடிகளுக்கு ஐ.தே.க.வே துணை போகிறது”

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள கருத்தில் பல விடயங்கள் மறைந்து காணப்படுவதாக தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்தில் மோசடிகள் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தினை குறிப்பிடலாம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கொள்கைகள் சிறப்பானதாக காணப்பட்டது. அதன் காரணமாகவே ஒன்றிணைந்தேன். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக காணப்படுகின்றது என்ற ரீதியிலும் குறித்த விடயத்தினை கருதலாம். அரசாங்கத்தில் இடம்பெறுகின்ற ஊழல்மோசடிகள் அனைத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சியே துணைபோயுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!