கழிவறையில் கத்தியுடன் காத்திருந்த சிறுமிகள்- மாணவர்களின் இரத்தம் குடிக்க திட்டமென தகவல்

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப் பாடசாலையில் இரு சிறுமிகள் அவர்களுடன் படிக்கும் மாணவர்களை கொன்று இரத்தம் குடிக்க திட்டமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பாடசாலையில் படிக்கும் 2 சிறுமிகள் அங்குள்ள கழிவறையில் பதுங்கி இருந்தகைக் கண்டு சந்தேகமடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்ட போது அவர்களிடம் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 2 சிறுமிகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிகள் மனித ரத்தம் குடிக்க விரும்பினர்.

அதற்காக கத்தியுடன் வந்த அவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களின் குரல்வளையை அறுத்து அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும் கூறினர். அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த சிறுமிகளிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!