டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் குடிநீர் தொட்டியிலிருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக டெல்லி பொலிஸார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“டெல்லி – ரோஹினி மாவட்டத்திலுள்ள அலிப்பூர் பகுதியில் முக்மெல்பூர் கிராமம் உள்ளது. இங்குள்ள மாநகராட்சி பாடசாலையின் குடிநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு இருப்பதாக கடந்த புதன் கிழமை மாலை வேளையில் எமக்கு தகவல் கிடைத்தது.
குறித்த குடிநீர் தொட்டியை துப்புரவு தொழில் செய்யும் தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்த வேளையிலேயே மண்டையோடும் சில எலும்புகளும் கிடந்துள்ளன.
அதனையடுத்தே பாடசாலை நிர்வாகத்தினர் எமக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தடையவியல் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த நாம் மீட்கப்பட்ட மண்டையோட்டையும் எலும்புத்துண்டங்களையும் தடையவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.
மீட்கப்பட்ட எலும்புகள் ஆணினுடையதா? அல்லது பெண்ணினுடையதா? என்பது ஆய்வறிக்கை வந்த பிறகே தெரிய வரும்.
இச் சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபர் ஆசிரயர் உட்பட அனைவவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.” என தெரிவித்தனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!