அரசியல் கைதிகளைத் தேடிச் சென்ற நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று வெலிக்கடை மற்றும் மகசின் ஆகிய சிறைச்சாலைகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நேற்றைய தினம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!