கோர விபத்தில் இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: -விசாரணையில் மனைவி சொன்ன தகவல்

திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மகள் தேஜஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா பாஸ்கர் ஒருவார சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில், மனைவி லட்சுமி மட்டும் உயிர்பிழைத்து வீடு திரும்பியுள்ளார். அதிகாலை நடந்த இந்த விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கார் ஓட்டுநர் அர்ஜீன், தான் காரை ஓட்டவில்லை என்றும் பாலாபாஸ்கர் தான் காரை ஓட்டினார் என வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பியுள்ள லட்சுமி, தனது கணவர் காரை ஓட்டவில்லை என்றும் டிரைவர் தான் காரை ஒட்டினார் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!