இன்று மஹிந்தவுடன் இணைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்? – மறுக்கிறார் ஹக்கீம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதிய அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார். நேற்றிரவு தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்து கொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் இக்கூற்றை மறுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை. அதேவேளை, புதிய அரசாங்கத்தின் இணைவதாக பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறிய கருத்தை தான் மறுப்பதாக ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!