எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி

கொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஆபிரிக்க நாடான கொங்கோவின் கிழக்கு பகுதியில் 298 பேர் கடும் காய்ச்சலுக்குள்ளான நிலையில் அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏனைய 35 பேருக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந் நோய் தாக்கியவர்களில் அதிகளவானோர் வடக்கு, கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அங்கு 8 இலட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

இந் நிலையில் அங்கு எபோலா வைரஸ் தாக்கி வருகிற நிலையில், சிகிச்சை அளிக்கிற வைத்தியக் குழுவினருக்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கொங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!