யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இதற்காக, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!