இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தோல்வியடைந்தால் புதிய அரசாங்கம்!

இடைக்கால வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தாலும் கூட, புதிய அரசாங்கம் நியமிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கியது. அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் தினத்தை நிதியமைச்சர் தீர்மானிப்பார்.இடைக்கால வரவு செலவுத் திட்டம் தோல்வியடைவது அரசாங்கம் ஒன்று விலகுவதற்கு காரணமாக அமையாது. வரவு செலவுத் திட்டம் நிராகரிக்கப்பட்டால், அரசாங்கம் கலையும். இது நிதி தொடர்பான சட்டமூலம். அது தோல்வியடைந்தால், புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!