சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் 16 பேரை வளைக்கும் முயற்சியில் மஹிந்த!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்க அழைப்பு விடுக்க உள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நமப்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், எம்.பிக்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

தம்முடன் இணைந்து கொண்டு அரசியல் பயணத்தை தொடருமாறு அவர் கோரவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்த சுதந்திரக் கட்சியின் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக அழைப்பு விடுக்க உள்ளார். பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 அமைச்சர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!