பாராளுமன்ற புனரமைப்பு நடவடிக்கை : முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.!

பாராளுமன்ற புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இவ்வருடம் 200 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கியுள்ளது. 10 மில்லியன் ரூபா ஒதுக்கியதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் பாராளுமன்ற கட்டடமானது 30 வருடங்கள் பழமையானது. மக்களின் பொது உடைமை என்ற வகையில் பாராளுமன்றத்தை மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகும் என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!