காபுல் தற்கொலைக் குண்டு தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாகப் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைநகர் காபுலில் பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் அருகில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதலில் அங்கிருந்த 10 பேர் உடல் சிதறி பரிதாபமாகப் பலியானதோடு மேலும், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரிட்டன் பாதுகாப்பு நிறுவனம் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குறித்த நிறுவனம், காபுலிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!