சிகிச்சைக்காகச் சென்ற பெண் மீது வைத்தியசாலை ஊழியர்கள் துஸ்பிரயோகம்

பாகிஸ்தானில் அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணை, வைத்தியசாலை ஊழியர்கள் சேர்ந்து 8 மணிநேரம் துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மூலநோய் காரணமாக, லாகூரில் உள்ள சர்வீஸ் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு அவரை அனுமத்தித்த பின்னர் அடுத்த நாள் காலை 7.30மணிக்கு அவரை சத்திரசிகிச்சை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அனஸ்தீசியா எனும் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், மாலை 7 மணிக்கு வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணிற்கு திடீரென அடி வயிறும், சிறுநீரக பாதையிலும் வலி எடுக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து தன்னுடைய சகோதரியிடம் கூறியதும், அவர் ஷேக் ஸாயத் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்,ஷாட்கான் பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை நிர்வாகம் மீது புகாரளித்தார்.. இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பெண்ணின் பரிசோதனை மாதிரிகளை கொண்டு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவொன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!