நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழிப்பதற்காக அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற, அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் பொறுப்பை ஜே. வி. பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப் பட்டதும் தற்போதைய நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் குறித்த பிரேரணைக்கு கூட்டு எதிரணித்தரப்பு ஆதரவு வழங்கத் தயாராயிருப்பதாக கூட்டு எதிரணிப் பிரமுகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை இல்லாதொழிக்கும் அரசமைப்புத் திருத்தப் பிரேரணை விடயத்தில் கூட்டு எதிரணி எடுக்கவுள்ள நிலைப்பாட்டுக்கமையவே மகிந்த அலையின் பயணமார்க்கம் அமையும். நாட்டின் சாதாரண பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்று அரச தலைவர் பதவியை இல்லாதொழிக்கும் விட யத்தைவிட வேறு எத்தனையோ சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
இத்தகைய நிலையில் நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழிப்பது குறித்து ஜே. வி.பி இவ்வளவு அக்கறையும், அவசரமும் காட்டுவதன் நோக்கம் என்ன? உண்மையில் இது விடயத்தில் ஒரு கல்லெறியில் இரண்டு குருவிகளை வீழ்த்தும் திட்டமே முன்னெடுக்கப்படுவதாகக் கொள்ள முடிகிறது.
பதின்மூன்றாவது திருத்தத்தை
நடைமுறைப்படுத்தத்தக்க ஆபத்து
நடைமுறையிலுள்ள அரசமைப்பில், அதற்கான 13வது திருத்த விதிகள் உள்ளடங்கியுள்ள நிலையில், நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை இல்லாதொழிப்பது சரியானது தானா? இந்த நாட்டு மக்களது நிறைவேற்று அதிகாரம், முழு நாட்டு மக்களது வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தனி மனிதரது கைவசம் இருப்பது, அரசினது பிளவுபடாத ஒரே நாடு என்ற தன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்.
அரசமைப்புக்கான 13வது திருத்தத்தின் மூலம் கூட்டாட்சி உருவாகாத வகையில் தடுக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டியமை, 1978ஆம் ஆண்டின் அரசமைப்பின் மூலமாக நிறைவேற்று அரச தலைவர் நடைமுறை ஏற்படுத்தப்பட்டதனாலே ஆகும். வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த வரதராஜப்பெருமாள் தமக்கான அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டபோது, வடக்கு கிழக்கு மாகாண சபையைக் கலைக்காது, அதனை ஆளுநரது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வாய்ப்புக்கிட்டியமை, நிறைவேற்று அரச தலைவர் நடைமுறை அப்போது நடைமுறையில் இருந்ததினாலேயே ஆகும்.
1987ஆம் ஆண்டில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் அரசமைப்புக்கான 13வது திருத்தம் இணைக்கப்பட்ட வேளை வரை, இந்த நாட்டு மக்களது வாக்கினால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவருக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்திருக்காவிட்டால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எவருக்கும் அரசமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் அரசினது பிளவுபடாத ஒரே நாடு என்ற தன்மைக்குப் பாதிப்பேதும் ஏற்படாது எனக் கூற வாய்ப்புக் கிட்டியிருந்திருக்கமாட்டாது.
நிறைவேற்று அரச அதிபர் நடைமுறையை ஒழிக்கத்
திட்டமிடப்படுகிறது
இன்று நாட்டு மக்களது தம்மைத் தாமே ஆளும் அதிகாரத்தின் மூலம் உருவான நிறைவேற்று அதிகாரம், ஒரு தனிமனிதரது கைவசம் இருக்கும் நடைமுறையை இல்லாதொழிக்க முயற்சிக்கப்படுகிறது.
ஆனால் 1987ஆம் ஆண்டில் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13வது திருத்தம் அதே விதத்திலோ அல்லது அதைவிடப் பலம் வாய்ந்ததாகவோ இருந்து வருகிறது. அரசமைப்புக்கான 13வது திருத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், பிளவுபடாத ஒற்றையாட்சி நடைமுறையே நாட்டில் செயற்படுவதாகக் கூறக் காரணமான நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை இல்லாதொழித்தால், 13வது திருத்தத்தின் படியான தலைமை அமைச்சரே அரசுக்குத் தலைமை தாங்கும் நடைமுறையின் கீழ் பிளவுபடாத நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்படுமா? நிறைவேற்று அரச அதிபர் நடைமுறை இல்லாதொழிக்கப்படும் நிலையில் நடைமுறையில் இருக்கும் 13ஆவது திருத்தமும், நிறைவேற்று அரச தலைவர் நடைமுறை கடைக்கொள்ளப்படும் நிலையில், செயற்படும் திருத்தமும் 13வது திருத்தம் தானா?.
அரசமைப்புக்குக் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தத்தால் நாடு அராஜக நிலைக்கு உட்பட்டுள்ளது என்பது அதனை நிறைவேற்ற முன்னின்ற தரப்பினர்களுக்குத் தற்போது தௌிவாகப் புரிந்துள்ளது. அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் ஆகியோர் மத்தியில் நிலவும் பனிப்போரைத் தவிர நல்லாட்சி என்பதன் கீழ் இந்த நாட்டு மக்களால் வேறெந்தப் பலாபலனையும் ஈட்ட முடியவில்லை.
அரசமைப்புக்கான 19வது திருத்தத்தால் சிக்கலைச் சந்தித்துள்ள இந்த நாட்டில், 20வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையையும் நீக்கிவிட்டால் நாட்டின் கதி என்னவாகும் என எண்ணத் தோன்றுகிறது.
தாமரை மொட்டுத் தரப்பினர் நிறைவேற்று அதிகாரத்தை
ஒழிக்க ஆதரவளிப்பார்களா?
இத்தகைய அம்சங்களை ஆராய்ந்து பார்க்காது, தாமரை மொட்டுத் தரப்பினரால், நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை இல்லாதொழிக்க ஆதரவளிக்க இயலுமா? அவ்விதம் அதரவு வழங்குவது சர।யானது தானா?
நிறைவேற்று அரச தலைவர் நடைமுறை செயற்படும்போது நாட்டு மக்களது அபிமானம் பெற்ற பிரமுகரொருவரே அரச தலைவராகச் செயற்பட வாய்ப்பு அமை கிறது. அந்த அடிப்படையில் நோக்கினால், அத்தகைய தகுதியை இன்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முற்றுமுழுதாக இழந்து போயுள்ளார்.
ஐ. தே. கட்சியில் புனரமைப்பைக்கோரும் ஐ. தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த அரச தலைவருக்கான தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சிக்குப் பொருத்தமான தலைவரொருவர்நியமிக்கப்படுவார்என ரணில் தெரிவித்து வருகிறார்.
அதற்கு முன்னர் அரச தலைவர் நடைமுறை ஒழிக்கப்படுமானால், ரணிலுக்குத் தமது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய தேவை எதுவும் எழாது .அதற்குப் பின்னர் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை ஈட்டித் தலைமை அமைச்சர் பதவியை ரணில் கைப்பற்ற எண்ணுகிறார். தமக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றமை போன்று, தலைமை அமைச்சர் பதவியை மீண்டும் கைப்பற்றுவது சிரமமானதொன்றல்ல என ரணில் எண்ணுவது நியாய மானதே.
நிறைவேற்று நடைமுறை ஒழிக்கப்பட்டால்
தலைமை அமைச்சராகும் வாய்ப்பு மகிந்தவுக்குக் கிட்டக்கூடும்
அதேசமயம், தாமரைமொட்டுத் தரப்பை நோக்கும் போது, மகிந்தவால் மீ்ண்டும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட அரசமைப்பு ரீதியில் வாய்ப்புக் கிடையாது. ஆதலால், அரச தலைவர் நடைமுறையை ஒழி்த்துவிட்டு, தலைமை அமைச்சர் தலைமையிலான நிர்வாகமுறை ஏற்படுத்தப்படுமானால், மகிந்தவுக்கு தலைமை அமைச்சராக அரசுக்குத் தலைமை தாங்க வாய்ப்புப் கிட்டக்கூடும்.
அவ்விதம் மட்டும் எண்ணி மகிந்த நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழித்துவிட உடன்படுவார் என, தற்போது திருத்தப் பிரேரணையைக் கொண்டுவர முயலும் தரப்பினர் எண்ணக்கூடும்.
இவை யாவற்றையும் விட, குறித்த திருத்தத்தின்மூலம் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பாதையே தடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.
அரச தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாது போகுமானால், தாமரைமொட்டுத் தரப்புக்கு மகிந்த என்ற பாத்திரத்துக்குப் பதிலாக கோத்தபாய ராஜபக்ச என்ற பாத்திரத்தின் தேவை ஏற்படாது. அத்தகைய நிலையில் மகிந்தவுக்குப் பதிலாக, அல்லது மகிந்தவுக்குப் பின்னராவது தலைமை அமைச்சர் பதவியை வகிக்க தாமரைமொட்டு தரப்பால் மற்றொரு ராஜபக்சவுக்கு வாய்ப்புப் கிட்டும்.
எனவே அத்தகைய மற்றொரு ராஜபக்சவும், ஜே.வி.பி.தரப்பால் கொண்டு வரப்படவுள்ள அரச தலைவர் நடைமுறையை இல்லாதொழிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு கூட்டு எதிரணி தள்ளப்பட்டுச் செல்ல அதிக வாய்ப்புண்டு.
தாமரைமொட்டுத் தரப்பின் அரசியல் ஆலோசகர்களாகவுள்ள சிலபிரமுகர்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திவரும் கருத்துக்களிலிருந்து மேற்குறிப்பிட்ட விடயம் உறுதியாகிறது.
தாமரை மொட்டுத் தரப்பின் அரசியல் ஆலோசகர்களது
பல்வேறு ஆலோசனைகள்
தாமரை மொட்டுத் தரப்பின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான சப்ரகமுவ பல்கலைக்கழகப் பேராசிரியரொருவர், ‘‘தாமரை மொட்டுத் தரப்பின் சார்பில் 2020 ஆண்டின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட மிகப் பொருத்தமானவர் கோத்தபாயவா அல்லது பஸிலா என்பதல்ல பிரச்சினை. உண்மையில் அதற்குப் பொருத்தமானவர் மகிந்தவேயாயினும், துரதிஷ்டவசமாக அவரால் போட்டியிட இயலாது. 2020ஆம் ஆண்டில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறுமா என்பதுகூட நிச்சயமில்லை. ஆனாலும் அவ்விதம் இடம்பெறுமானால், எனது தெரிவு பஸில்ராஜபக்சவே’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் கோத்தபாய ராஜபக்சவால் பிரச்சினை வருமானால், அதனைத் தீர்த்துக்கொள்ள மாற்றுவழி, நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழி்க்கும் பிரேரணைக்கு ஆதரவளிப்பதே என்பது அவரது நிலைப்பாடாகும்.
அதேவேளை கோத்தபாய ராஜபக்சவையை அடுத்த அரச தலைவர் தேர்தலில் கூட்டு எதிரணி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒரு தரப்பினர், அரசியல்வாதிகள் தரப்பில் என்று மட்டுமல்லாது, சிங்கள இனவாத புத்திஜீவிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திவரும் தரப்பினரிலும் இருக்கவே செய்கி்ன்றனர்.
அதேவேளை, தாமரை மொட்டுத் தரப்பின் எதிர்கால அரச தலைவர் வேட்பாளரோ, அல்லது தலைமை அமைச்சர் வேட்பாளரோ, சிறுபான்மை இனத்தவர்ளது ஆதரவைப்பெறும் விதத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும், தற்போதைய அரச தலைவர் வசமுள்ள 13வீத நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவை தாமரை மொட்டுத் தரப்புக்குப் பெற இயலாது போகுமானால், மேற்குறித்த யோசனை பரிசீலிப்படலாம் எனவும் கருத்து முன்வைக்கப் பட்டு வருகிறது.
கடைசியில் என்னதான் ஆகப் போகிறது? தனிப்பட்ட பிரமுகர்களது அதிகார விருப்பை நிறைவேற்றி வைக்க முயன்று, நிறைவேற்று அரச தலைவர் நடைமுறை ஒழிக்கப்பட்டு, இந்த நாட்டில் அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முற்றுமுழுதாக வலுவுடன் செயற்படுத்துவதாக ஆகப் போகிறது. முற்றுமுழுதாக பிளவுபடாத நாடு என்ற ஒற்றையாட்சி நிலைப்பாட்டில் தொங்கிக்கொண்டிக்கும் நிலையும், முற்றுமுழுதாக அற்றுப்போய்விடப் போகிறது.
மிகப்பெரும் அரசமைப்புத் திருத்தம் இல்லாது, சம்பந்தன் தரப்பின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் நிலை ஏற்படப்போகிறது. இதனைக் காரணமாக வைத்து மகிந்த தரப்பின் ஒற்றுமை குலைந்து போக வாய்ப்பு ஏற்படவுள்ளது. ஒரே கல்லெறியில் நான்கோ அல்லது ஐந்தோ குருவிகளை வீழ்த்திவிடும் நிலை உருவாகப் போகிறது.
இந்தியாவில் முதலாவது தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவுக்கு ஆங்கில விவேகமும் இந்திய உள்ளமும் இருப்பதாக மகாத்மாகாந்தி ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். எமது நாட்டின் அரசியல் போகும் போக்கை அவதானிக்கையில், எமது நாட்டின் அரசியல் தலைவர்களில் பலருக்கும்கூட ஆங்கில விவேகமும் இந்திய உள்ளமும் இருப்பதாகத் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பமே அங்குதான் உள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!