விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு – ஜனவரி 31 இல்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, எதிர்வரும் ஜனவரி 31ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்த தவறினார் என்று, டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று வரை விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இதன்போது, மீண்டும் ஜனவரி 31ஆம் நாள் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!