சினிமா வாய்ப்பிற்காக கற்பை இழந்த பெண்கள்!..

சென்னை, அடையாறு மற்றும் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த, 24 மற்றும் 28 வயதுடைய இரு பெண்கள், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:பட்டப்படிப்பு படித்துள்ளோம். சினிமாவில், கதாநாயகியாக நடிக்க வேண்டும் என, வாய்ப்பு தேடி வந்தோம்.

இரு ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’ வாயிலாக, அடையாறு அடுத்த, சாஸ்திரி நகரைச் சேர்ந்த, மோகன், 36, என்பவனை அறிந்தோம்.சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தரும், ‘காஸ்டிங்’ தொழிலை அவன் செய்து வரும் தகவல் கிடைத்தது. அவனது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டோம். சாஸ்திரி நகரில் உள்ள, அலுவலகத்திற்கு வரச்சொன்னான்.வித விதமாக புகைப்படங்கள் எடுத்தான்;

கண்டிப்பாக, சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினான். ‘வாட்ஸ் ஆப்’ தொடர்பு மொபைல் போன் எண்களையும் பகிர்ந்து கொண்டோம்.ஏதேதோ ஆசை காட்டி, எங்களில் ஒருவரை, நிர்வாணமாக படம் எடுக்கச்சொல்லி, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக அதை பெற்று, வைத்துக் கொண்டான்.பின், அந்த படத்தை, ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பல முறை அவளை பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.

இந்நிலையில், டிச., 6ல், மோகன் துவங்கி உள்ள, ‘வாட்ஸ் ஆப்’ குரூப்பில், பெண் ஒருவர், சில வீடியோக்களை வெளியிட்டார். அதில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த, எங்களை போன்ற, பல பெண்களை, மோகன், படுக்கை அறைக்கு வரவழைத்து, பாலியல் ரீதியாக சீரழித்தது தெரிந்தது.காமுகன், காஸ்டிங் மோகன் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!