சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருடன், தனியான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
நேற்றிரவு நடந்த இந்தச் சந்திப்பு மூடிய அறைக்குள் இடம்பெற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சுமார் 10 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நீடித்ததாகவும், கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!