நாங்களும் நீதிமன்றம் செல்வோம்!

SRI LANKA-POLITICS-ELECTION
அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் எதிர்வரும் இரு ஆண்டுகளில் மூன்று வகையான தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில், அமைச்சரவையொன்று நாட்டில் இருந்தாலும் இல்லாவிடினும் தேர்தலை நடத்துவதற்கு எந்ததொரு தடையும் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!