ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி துரோகமிழைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைணந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வரவேற்க்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இனி ஒருபொதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெறாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எவரும் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்புரிமையை பெறவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

என். எம் பெரேரா மத்திய நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!