உத்தரப் பிரதேசத்தில் சோகம்- 13 மாணவர்கள் உயிரிழப்பு!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற வான், தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வானில் 25 மாணவர்கள் பயணித்துள்ளனர்.

அதேவேளை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் (இந்திய) இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!