மொராக்கோவில் இரு இளம் பெண்கள் படுகொலை- ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது

டென்மார்க் நோர்வேயை சேர்ந்த இரு இளம் பெண்கள் மொராக்கோவில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வர் ஐஎஸ் ஆதரவாளர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கன்டினேவியன் நாடுகளை சேர்ந்த இரு இளம் பெண்கள் கத்திக்குத்து காயங்களுடன் மொராக்கோவின் தென்பகுதி நகரொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

இந்த கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர்கள் அனைவரும் வீடியோவில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கொலைக்கு முன்னர் குறிப்பிட்ட வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறிப்பிட்ட வீடியோவில் தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மொராக்கோவின் இமில் என்ற பகுதியில் உள்ள மலைப்பகுதியொன்றில் கூடாரம் அடித்து தங்கியிருந்த இரு பெண்களும் சடலங்களாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!