நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறி போகும் அபாயம் – சிக்கலில் சுமந்திரன் எம்.பி.!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் பிரச்சினை உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் இது தொடர்பில் வினவிய போது, இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக றிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனுக்கு இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த என்பவரே முதன் முதலில் குறிப்பிட்டிருந்தார்.

புலம்பெயர் தமிழர்களின் அவசியத்திற்கமைய சுமந்திரன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிப்பதாக கூறப்பட்டது. எனினும் பொதுஜன பெரமுன தாங்கள் கட்சியில் மஹிந்தவுக்கு உறுப்புரிமை வழங்கவில்லை என கூறினால் அந்த பிரச்சினை அத்துடன் நிறைவடைந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மூன்று பேர் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுள்ளனர். அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக மஹிந்த அணியினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!