சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் தற்­போ­தும் பிறரை அடி­மைப்­ப­டுத்­தும் எண்­ணமே!!

சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் எப்­போ­தும் தமது ஆதிக்­கத்­தின் கீழே­தான் மற்­ற­வர்­கள் அடி­ப­ணிந்து செயற்­ப­ட­வேண்­டும் என்ற நோக்­கிலே இயங்குகிறார்கள். தமிழர்களின் பிரச்சினை இன்­றும் முடிந்­தபா­டில்லை. தமிழ் அர­சும் உரு­வா­க­வில்லை. இன்­றைய சூழ­லி­லும் அந்த அபி­லா­சை­களை விட்­டுக் கொடுக்க முடி­யாது. அதைத் தொடர்ச்­சி­யாக எடுத்­துச் செல்­ல­வேண்­டும்.

இவ்­வாறு கலா­நிதி விக்­கி­ர­ம­ பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்­தார்.
தந்தை செல்­வா­வின் 41 ஆவது நினைவு தினம் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தந்தை செல்வா நினை­வுச் சதுக்­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது.இந்த நிகழ்­வில் சிறப்­பு­ரை ­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சுக்கு அழுத்­தம்
கொடுக்­க ­வேண்­டும்

தமி­ழர் தாய­கத்தை நாம் மறந்து விட­மு­டி­யாது. தற்­போ­தைய அரசை நாம் பல்­வேறு வகை­யி­லும் நிர்ப்­பந்­திக்­க­ வேண்­டி­யி­ருக்­கின்­றது.நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் பின்­னால் இன­வா­தி­கள, மத­வா­தி­கள் எல்­லோ­ரும் வெறி­யர்­கள் போல் நடந்­து­கொண்­டார்­கள். ஆனால் அதனை எல்­லோ­ரும் இணைந்து தோல்­வி­யு­றச் செய்­தோம். அதே­போல் எதிர்­கா­லத்­தி­லும் எங்­கள் பய­ணம் ஒன்­றி­ணைந்து அமை­ய­வேண்­டும்.

இந்­தி­யா­வைப்­போன்று
தீர்வு காண­ வேண்­டும்

இந்­தி­யா­வில் அதி­கா­ரப் பகிர்­வுப் பிரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்வு காணப்­பட்­டதே அதே­போன்று இலங்­கை­யி­லும் அதி­கா­ரப் பகிர்வை நிலை­நாட்ட நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட திட­சங்­கற்­பம் பூண­வேண்­டும்.

இடது சாரி­க­ளும் தவ­றி­ழைப்பு
இலங்­கை­யில் சிங்­கள மொழி மாத்­தி­ரமே அரச கரும மொழி­யாக இருக்­க­வேண்­டும் என்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா செயற்­பட்­ட­போ­தி­லும் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரப் பகிர்வு முக்­கி­யம் என்ற கொள்­கையை அங்­கீ­க­ரித்து பண்டா செல்வா ஒப்­பந்­தத்­தில் கைச்­சாத்­திட்­டி­ருந்­தார்.

ஆனால் இடது சாரி­கள் அந்த ஒப்­பந்­தத்­தைப் பாது­காக்க முன்­வ­ரா­மல், அவர்­கள் மேற்­கொண்ட பெரும் தவ­று­கள்­தான் இன்­றி­ருக்­கும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­விட்­டி­ருக்­கி­றது. இட­து­சா­ரி­கள் இந்­தத் தவ­று­க­ளைச் செய்­யாது அன்று அந்த ஒப்­பந்­தத்­தைப் பாது­காக்க முன்­வந்­தி­ருந்­தால் இலங்­கை­யின் வர­லாறு வித்­தி­யா­ச­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கும்.

தமிழ் மக்­க­ளின் தந்தை, தமிழ்த் தேசிய இனத்­தின் தந்தை என்று தந்தை செல்வா அழைக்­கப்­பட்­டி­ருந்­தார். அவ­ரது அர­சி­யல் வாழ்க்கை ஆரம்­பிக்­கப்­பட்­ட­போ­து­தான் தமிழ் மக்­க­ளின் தேசிய இனம் என்­பது ஆரம்­பிக்­கப்­பட்­டதா என்ற கேள்வி எழு­கின்­றது.

சிங்­கள மக்­கள் தங்­கள் தேசிய இனம் சிங்க பாபு­வில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்­டது என்று கூறு­கின்­றார்­கள்.தேசிய இனம் என்­பது அண்­மைக்­கால வர­லாற்­றில் தோற்­றம் பெற்ற எண்­ணக்­க­ரு­வும் செயற்­பா­டும் ஆகும். முத­லா­ளித்­து­வம் என்­பது வளர்ச்சி அடைந்த பின்­னரே தேசிய இனம் என்­பது வலுப்­பெ­றத் தொடங்­கு­கின்­றது.
இலங்­கை­யில் 1900 ஆண்­டு­க­ளின் பின்­னரே தமி­ழர்­கள் தேசிய இன­மாக உரு­வாக்­கம் பெறு­கின்­றார்­கள்.

ஆனால் இந்­தி­யா­வில் அதற்கு முன்­னரே உரு­வாக்­கம் இடம்­பெற்­றுள்­ளது. இதன் கார­ண­மா­கவே அதனை வலி­யு­றுத்தி ஈ.வி.ரே, பெரி­யார் போன்­றோர் தலைமை தாங்­கிப் போராட்­டங்­களை நடத்­தி­னார்­கள். அந்­தக் காலத்­தில் இந்­தி­யா­வில் நேரு போன்ற புத்­தி­சா­லி­கள் இருந்­த­மை­யால் அந்­தப் போராட்­டங்­களை ஏற்று அங்­கீ­க­ரித்து ஓர் சம­நி­லையை ஏற்­ப­டுத்­தி­னார்­கள்.

இலங்கை கால­னித்­துவ நாடாக இருந்­த­தால் தமிழ், சிங்­கள, முஸ்­லிம் தலை­வர்­கள் ஆங்­கில மொழி­யின் மீது மதிப்­புக் கொண்­டி­ருந்­தார்­கள். அவர்­கள் இங்­கி­லாந்­து­போல எல்­லோ­ரும் ஆங்­கில மொழி­யி­லேயே பேசக்­கூ­டிய நிலையை முன்­னெ­டுக்­க­மு­டி­யும் எனக் கரு­தி­னார்­கள். இதன் கார­ண­மா­கவே அனைத்­துத் தலை­வர்­க­ளும் ஓர­ணி­யில் இருந்து செயற்­ப­ட­மு­டி­யு­மாக இருந்­தது.

ஆனால் பொது­மக்­கள் மத்­தி­யில் தமிழ் மக்­கள் தமது மொழி­யி­லும் சிங்­கள மக்­கள் தமது மொழி­யி­லும் கற்று முன்­னே­றிக்­கொண்ட காலத்­தில் வாணி­பப் பொரு­ளா­தா­ரம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது தமிழ் சிங்­கள சமூ­கத்­தின் ஆசா­பா­சங்­க­ளைப் பூர்த்தி செய்­ய­வேண்­டிய நிலைமை அன்­றைய தலை­மைக்கு ஏற்­பட்­டது.

செல்­வ­நா­ய­க­மும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க இரு­வ­ரும் ஒரே கல்­லூ­ரி­யில் ஒன்­றா­கப் படித்­த­வர்­கள். அவர்­க­ளது சிந்­த­னை­யில் மாற்­றம் ஏற்­பட்­டி­ருந்­தது. 1926 ஆம் ஆண்டு பண்டா சமஸ்டி ஆட்சி முறை­யைக் கொண்­டி­ருந்­த­து­டன் பின்­னர் சிங்­கள மகா சபை­யில் பத­வி­வ­கித்­த­போது அந்­தக் கொள்­கையை முற்­றி­லும் மாற்­றி­ய­மைத்து வேறு வகை­யான கொள்­கையை ஆத­ரிக்­கத் தொடங்­கி­னார்.

ஆனால் தந்தை செல்வா நாட்­டில் நடப்­ப­வற்றை உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக் கொண்­டி­ருந்­தார். தமிழ் மக்­க­ளுக்கு நியா­யம் கிடைக்­க­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் அகில இலங்கை தமிழ் காங்­கி­ர­சின் ஜீ.ஜீ பொன்­னம்­ப­லத்­தின் பாதை­யில் தொடர்ந்து செயற்­ப­ட­மு­டி­யா­மல் அதி­லி­ருந்து வெளி­யேறி தமிழ் அர­சுக் கட்சி என்ற அமைப்பை உரு­வாக்­கி­னார்.

செல்வா தொடர்­பில்
தெற்­கில் தவ­றான கருத்து

தமிழ் அர­சுக் கட்­சி­யால் உரு­வாக்­கப்­பட்­ட­போது அது சமஷ்­டிக்­கு­ரிய பல பண்­பு­க­ளைக் கொண்­டி­ருந்­தது. நாட்­டில் நீதி­யான நியா­ய­மான ஜன­நா­யக மதம் சாராத சமத்­துவ சமூ­கத்தை நோக்­கிச் செயற்­ப­ட­வேண்­டும் போன்ற அடிப்­ப­டைக் கொள்­கை­க­ளைக் கொண்­டி­ருந்­தது.ஆனால் தென்­னி­லங்­கை­யில் பெரும்­பான்­மைச் சமூ­க­மா­னது இந்­தப் பண்­பு­களை மறந்து தமிழ் அரசு என்ற பதத்தை மாத்­தி­ரம் வைத்­துக்­கொண்டு இலங்­கை­யில் தமி­ழர் அரசு ஒன்­றைத் தோற்­று­விக்­கப் போகின்­றது என்ற பயத்­தை­யும் பூச்­சாண்­டி­யை­யும் ஏற்­ப­டுத்­தி­னார்­கள். இன்­றும் தென்­னி­லங்­கை­யில் தந்தை செல்­வா­வுக்கு எதி­ராக தவ­றான கருத்­துக்­க­ளும் பரப்­பு­ரை­க­ளும் இடம்­பெ­று­கின்­றன.

1956 ஆம் ஆண்டு தேர்­த­லில் வெற்றி பெற்ற எஸ்.டபிள்யூ.டி.பண்­டா­ர­நா­யக்க சிங்­க­ளம் மாத்­தி­ரம்­தான் அரச கரும மொழி என்று செயற்­பட்­ட­போ­தி­லும் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரப் பகிர்வு முக்­கி­யத்­து­வம் என்ற கொள்­கையை அங்­கீ­க­ரித்து 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

அந்­தக் காலத்­தில் இட­து­சா­ரி­கள் மொழி­க­ளுக்­கி­டை­யிலே சமத்­து­வம் வேண்­டும் என்று கரு­தி­னார்­களே தவிர அதி­கா­ரப் பகிர்வு தேவை என்­ற­அ­டிப்­ப­டை­யில் அத­னைப் பாது­காக்க அவர்­கள் முன் வர­வில்லை. அதைப் பார­தூ­ர­மான தவ­றா­கவே கரு­து­கின்­றேன்.

பண்டா செல்வா ஒப்­பந்­தத்­தைப் பாது­காக்க முடி­யாது போன­மைக்கு இடது சாரி­க­ளின் பெருந் தவ­று­தான் கார­ணம். அத­னைப் பாது­காத்­தி­ருந்­தால் இன்­றைய நிலை­மையை நாங்­கள் சந்­தித்­தி­ருக்­கத் தேவை­யில்­லாது போயி­ருக்­கும். இதன்­பின்­னர் இந்­தத் தோல்­வி­க­ளைப் பொறு­மை­யா­கத் தாங்­கிக்­கொண்டு செயற்­பட்ட செல்வா 1965 ஆம் ஆண்டு டட்லி செல்வா ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இத­னை­யும் இடது சாரி­களே கடு­மை­யாக எதிர்த்­தார்­கள். இரண்டு தட­வை­கள் செல்­வ­நா­ய­கம் தோற்ற போதும் அவர் பொறு­மை­யு­டன் இருந்து தன்­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார். ஒரு­போ­தும் அவர் தன் கொள்­கை­கள் கோட்­பா­டு­களை இடை­யில் கைவி­ட­வில்லை.மகாத்­மா­காந்தி போன்று அமை­தி­யான போராட்­டங்­க­ளையே மேற்­கொண்­டார்
– என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!