சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக தயாசிறி – மைத்திரி அதிரடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான அணி ஒன்று வலுவடைந்து வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த கூட்டத்தில், தற்போதைய பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாசவுக்குப் பதிலாக, தயாசிறி ஜெயசேகரவை பொதுச்செயலராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜெயசேகர, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பவராவார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச சில மாதங்களே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!