வடக்கு ஆளுநராக மார்ஷல் பெரேரா?

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில் இன்று புதிய நியமனங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் கிழக்கு மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!