ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் பலி -நைஜீரியாவில் சம்பவம்

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவவீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக ஹெலிகொப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த ஹெலிகொப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!