அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 5ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன் என்ற அரசியல் கைதியே தன்னை விடுவிக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் நேற்றுமுன்தினமும், கடந்த திங்கட்கிழமையும் தண்ணீர் அருந்துவதைக்கூட தவிர்த்திருந்தார். இதையடுத்தே அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரது தந்தையார் கடந்த சில தினங்களின் முன்னர் காலமாகியிருந்தார். அதற்காக சில மணித்தியாலங்கள் விடுமுறை அவருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!