சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மற்றும் கயல்விழி தம்பதிக்கு வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கயல்விழிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளான கயல்விழியை சீமான் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சீமான் – கயல்விழி தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. சீமானுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அவரது தம்பிகள் கொண்டாடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!