பசில், நாமலுக்கு வெசாக் நாளிலும் விடாத விசாரணை!

இலங்கையில் நேற்று பௌத்தர்கள் வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நாடுமுழுவதும், திருவிழா கோலம் பூண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தனர்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் கைதாகி பிணையில் வெளிவந்துள்ள பசில் மற்றும் நாமல் ஆகியோர் பிணை நிபந்தனைகளுக்கமைய, நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியனர். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமை நாமல் மற்றும் பசில் பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவிற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!