மாகாணசபைத் தேர்தலை பிற்போட விடமாட்டோம்!

மாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு இடமளிக்க முடியாது என்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில மாகாண சபைகளுக்குகான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளன.இன்னும் மூன்று மாகாண சபைகளுக்கான ஆயும்காலம் எதிர்வரும் மாதங்களில் நிறைவடையவுள்ளன. இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை மேலும் பிற்போடுவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!