பதவியை மாத்திரம் வைத்து திருப்தி காண முடியாது- மஹிந்த தேசப்பிரிய

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற பதவியை மாத்திரம் வைத்துக் கொண்டு அதில் திருப்தி காண முடியாது. சுமார் ஒன்றரை வருட காலமாக பிற்போடப்பட்டு வரும் தேர்தலை நடத்தி முடிக்க முடியாமல் பதவியில் இருப்பது வேதனையளிக்கின்றது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல்வாதிகளினுடைய கருத்துக்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தப் போவதில்லை. உரிய காலத்தில் தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல்களை நடத்துவதற்கு மத்திய வங்கியிடம் நிதியில்லை என அதன் ஆளுனர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் றோஹித அபே குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!