கடந்து சென்ற 19 ஆவது நூற்றாண்டு மனிதகுல வரலாற்றில் பல்வேறு திருப்புமுனை களுக்கு வழிவகுத்த நிகழ்வுகளைக் கொண்டதாகும். அவற்றில் ஒன்றே அனைவரும் இன்று அனுபவித்துவரும் எட்டு மணிநேர வேலை என்பதாகும். அதற்காக அமெரிக்கத் தொழிலாளர்களால் முன்னெடுக் கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட நாளே, மே முதலாம் திகதி நினைவு கொள்ளப்படும் மே தினமாகும்.
அத்தகைய பன்னாட்டுத் தினத்தைத் தமது பௌத்த முதன்மையைக் காட்டி மறுக்கவும் மாற்றவும் முனைவது அப்பட்டமான தொழிலாளர் விரோத நிலைப்பாடாகும்.
இது ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்று வந்துள்ளது. இந்த வருடமே தினத்தைப் புனித வெசாக்கைச் சாட்டாக வைத்து அரசு மே முதலாம் திகதியிலான பொது விடுமுறையை இல்லாமல் செய்து மே ஏழாம் திகதியை மே தினமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மே தின வரலாறு பற்றியும் அந்தத் தினத்தின் முக்கியத்துவம் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற போராட்டங்கள் சம்பந்தமாகவும் குறிப்பிடு வது அவசியமாகும்.
தொழிலாளர் சுரண்டல்களை
எதிர்த்து வெடித்தது பேரணி
பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சி பெற்று பலம்பெற்று வந்த காலப்பகுதியாகும். மூலதன முதலீட்டாளìர் கள் பெரு இலாபமடையவும் தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுவது மான சூழலே அன்று நிலவியது.
பத் தொன்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய அமெரிக்க ஆஸ்திரேலியத் தொழிலாளர்கள் மத்தியில் தமது நிலை பற்றிய விழிப் புணர்வு தோன்ற ஆரம்பித்தது. அதிலிருந்து மூன்று விடயங்கள் வற்புறுத்தப்பட்டன. வேலை நேரக்குறைப்பு, சம்பள அதிகரிப்பு, சங்கம் வைக்கும் உரிமை போன்றனவே அவையாகும்.
பதினெட்டு, பதினாறு, பதிநான்கு, பன்னிரண்டு, பத்து மணித்தியாலங்கள் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என முதலாளி களால் நிர்பந்திக்கப்பட்டு வந்த சூழலி லேயே எட்டு மணிநேர வேலை என் பது தொழிலாளர்களால் வலியுறுத்தப்பட்டது.
அதாவது 24 மணிநேரம் கொண்ட ஒரு நாளில் எட்டு மணி நேர வேலை எட்டு மணிநேர ஓய்வு, மிகுதி எட்டு மணிநேரம் ஏனைய விடயங்களைக் கவனிப்பது என வகுக்கப்பட்டே எட்டு மணிநேர வேலை என் பது பொதுக் கோரிக்கையாக்கப்பட்டது. இதற்கான தொழிலாளர்களின் போராட்டங்களை அமெரிக்கத் தொழி லாளர்கள் முன்வைத்து அவ்வப்போது வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இக்கால கட்டத்திலேயே ஜேர்மனியின் கார்ல் மாக்ஸ், பிரடெக்ற் ஏங்கல்ஸ் மற்றும் அவர்களோடு இணைந்தவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது 1848ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஐரோப்பிய அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் ஏனைய உலக நாடுகளின் தொழிலாளர்களுக்கும் பெரும் உந்துதலையும் உற்சாகத்தையும் வழங்கியது.
அதன் வழியில் அமெரிக்கத் தொழிலாளர்கள் தமது எட்டு மணிநேர வேலை என்கிற கோரிக்கையைப் போராட்டமாக்கினார். 1870 -/80களில் அவை வேகமடைந்தன. 1886ஆம் ஆண்டின் மே முதலாம் திகதி சிக்காக்கோ நகரின் தொழிலாளர்கள் பெரும் வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அன்று பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் தொழிலாளர்களின் செங்குருதி வீதிகளில் ஓடியது. வெண்சட்டைகள் குருதியில் தோய்ந்து செந்நிறமாகிக் கொண்டன. அன்றைய சம்பவங்களைக் கண்டித்து மே 3ஆம் 4ஆம் திகதிகளில் தொழிலாளர்களின் பெரும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு சிக்காக்கோ முடக்கப்பட்டது.
மே தினத்துக்கான விதை
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு முதலாளிகளால் பல்வேறு குழப்பங்கள் கொடுக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் குண்டொன்று வெடித்ததில் ஏழு தொழிலாளர்களும், நான்கு பொலிஸாரும் உயிரிழந்தனர்.
இந்த அசம்பாவிதத்துக்கு தொழிலாளர்களின் தலைவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு அவர்களில் நால்வருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பிடப்பட்டது. அந்த நால்வரும் தூக்கு மேடையில் வைத்து இறுதியாகக் கூறியவை, ‘’எமது கல்லறைகளின் மௌனம் ஆயிரம் சொற்பொழிவுகளை விட அதிகமானவற்றைக் கூறிக் கொண்டேஇருக்கும்’’ என்பதாகும்.
இத்தகைய குருதி தோய்ந்த வரலாற்றுக்கு வித்திட்ட மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அங்கீகாரம் பெற்றது. 1886ஆம் ஆண்டு இந்த அங்கீகாரம் கிடைத்தது. இதன்படி இந்த வருட மே தினம் 132ஆவது மே தினமாகும்.
இலங்கையில் மே தினம்
இலங்கையில் அந்நிய கொலனிய ஆட்சிக் காலத்திலும் சுதந்திரம் எனப்படுவதற்குப் பின்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் மேதினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தொழிலாளர்களும் தொழில் சங்கங்களும் இடது சாரிக் கட்சிகளும் மே தினத்தை மே முதலாம் திகதி நினைவு கூர்ந்து முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.
1956ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்பே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசே மே தினத்தை விடுமுறை தினமாக்கிக் கொண்டது. எனினும், வெசாக்தினத்தையொட்டி மே தினத்தைத் தடைசெய்து வந்த நிகழ்வுகள் இலங்கையில் ஏற்கனவே இடம்பெற்றவையாகும். ஆனால் அரச தடைகளையும் மீறி மே முதலாம் திகதியே மே தினத்தை நடத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளன.
1965ஆம் ஆண்டு மேதினத்தில் ஊர்வலங்கள் நடத்தக் கூடாது, கூட்டங்கள் மட்டும் என அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசு ஆணையிட்டது. அதனை மீறித் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஊர்வலம் நடத்தினர். யாழ்ப்பாணம் விதி விலக்கில்லை.
1969ஆம் ஆண்டில் மே தினத்துக் குத் தடை
1969ஆம் ஆண்டு
மேதினத்தை அன்றைய அரசு வெசாக்தினத்தைச் சாட்டாக வைத்து ஊர்வலங்கள் கூட்டங் களுக்குத் தடைவிதித் தது. இதனை மீறி மேதினத்தை அதன் முதலாம் திகதியே நடத்துவது என அன்றைய நா.சண்முகதாசன் தலைமையிலான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித் தது.
அதன் அடிப்படையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மேதினம் சட்டமறுப்பாக இடம்பெற்றது. கொழும்பில் ஊர்வலம் ஆரம்பிக்கும் இடத்தை முன்கூட்டியே பொலிஸார் மோப்பம் பிடித்ததால் ஊர்வலத்தைத் தடுத்துவிட்டனர். ஆனால் கூட்டத்தை பொலிசார் தடுக்கமுடியாதபடி நடத்தினர்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் மேதின ஊர்வலம் வெற்றிகரமாகப் பொலிஸாரின் கண்களில் படாது ஆரம்பித்து சுமார் இரண்டு கி.மீ. தூரம்வரை நடத்தப்பட்டதுடன் முடிவுக்குச் சற்று முன்பதாக முற்றவெளிக்கு அண்மையாக வைத்து பொலிஸா ரால் வழிமறிக்கப்பட்டுக் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் தலைமை தாங்கிச் சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கே. ஏ. ப்பிரமணியம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கஸ்தூரியார் வீதி, யாழ் பஸ் நிலையம், ஸ்ரான்லி வீதி, முட்டாஸ் கடைச் சந்தி, கே.கே.எஸ் வீதி வழியாக யாழ். முற்றவெளி நோக்கி ஊர்வலம் சென்றது. தற்போதைய கூட்டுறவுச் சங்க கட்டிடத்திற்கு அண்மையாகத் துப்பாக்கிகள், குண்டாந்தடிகள், தடுப்புத் தட்டி களுடன் பொலிஸ் படை வீதியின் குறுக்கே நிறுத்தப்பட் டிருந்தது. கலைந்து செல்லுமாறு பொலிஸ் கட்டளையிட்டது.
இது எங்களது பன்னாட்டு உரிமைத்தினம் என தலைமை தாங் கிச் சென்ற கே. ஏ.சுப்பிரமணியம் உரத்துக் கூற ஊர்வலத்தினர் முழக்கமிட்டனர். குண்டாந்தடித் தாக்குதலுக்கு கட்டளையிடப்பட்டது. முன்னணியில் சென்றோர் மீது பொலிஸ் மிருகத் தனமாகத் தாக்கியது.
குருதி வீதியில் வழிந்தோடியது. கண்ணீர் புகையும் பயன்படுத்தப்பட்டது. அன்று போன்றே இன்றும் மேதினம் மறுக்கப்படுகிறது. சிங்கள பௌத்தம் என்ற மேலாதிக்கத்துக்குள் இந்த நாடு ஆழமாக மூழ்கிவிட்டது. தொழிலாளர்களின் தினம் முடக்கப்படுவது அவர்களின் உழைப்பை கொச்சப்படுத்துவது போன்றதே. தொழிலாளர்கள் இல்லையேல் இலங்கையில்லை. இலங்கை மட்டுமல்ல எதுவும் இல்லை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!