கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை:மெக்சிக்கோவில் சம்பவம்

மெக்சிகோ மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதுமாக உள்ளது.

இந் நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4 ஆம் திகதி கடத்தி சென்றனர்.

இதையடுத்து சக பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமலேயே இருந்தது.

எனினும் சிடாகவ்ரோ நகரில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!