மனைவியால் வெட்டியெறியப்பட்ட ஆணுறுப்பு ; 25 ஆண்டுகளாக சத்திரசிகிச்சை கட்டணத்தை செலுத்தாத ஆபாசப்பட நடிகர்

அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகரொருவர் வெட்டி அகற்றப்பட்ட ஆணுறுப்பை இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைக்கு கடந்த 25 வருடமாக பணம் செல்லுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த ஆபாசப்பட நடிகர் நித்திரையில் இருக்கும் போது அவரின் மனைவி கணவரின் ஆணுறுப்பை வெட்டி வீசியுள்ளார்.

இந்நிலையில், கணவரின் தொடர் பாலியல் தொல்லையை தாங்க முடியாமல் மனைவி இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வெட்டி வீசப்பட்ட ஆணுறுப்பு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட ஆணுறுப்பினை மீண்டும் குறித்த நபரின் உடலில் பொறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் , சத்திர சிகிச்கைகளின் வாயிலாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி , சத்திர சிகிச்சை வெற்றிக்கரமாக இடம்பெற்றுள்ள நிலையில் , குறித்த நபர் சத்திர சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தாமல் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது வியாபாரம் நஷ்டத்தில் செல்வதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளதாக சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.

குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அவர் இதுவரை குறித்த கட்டணத்தை செலுத்தவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பல ஆபாச திரைப்படங்களில் நடித்து பாரியளவில் வருமானம் ஈட்டியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தகலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!