இனி விமானத்தில் இதனை பயன்படுத்தலாம்.!

விமான பயணத்தின் போது கைதொலைபேசி மற்றும் இணையதளம் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்துள்ளது.

தற்போது விமானத்தில் செல்லும் போது கைதொலைபேசி மற்றும் இணையம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் அமலில் உள்ளது. ஏனெனில் எலக்ட்ரானிக் கருவிகளில் இருக்கும் சிக்னல்களும், விமானத்தில் இருக்கும் சிக்னல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விட்டால் ஏதேனும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் ஏதேனும் பெரிய விபத்துக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

எனவே விமானத்தில் கைதொலைபேசி பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. தொழில் மற்றும் பிற பங்குதாரர்களுடன் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு டிராய் இம்முடிவை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!