குற்றம் இழைத்திருந்தால் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தண்டனை – சரத் பொன்சேகா

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஏதாவது தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

”முன்னாள் கடற்படை தளபதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், தண்டிக்கப்பட வேண்டும்.

தமது மேல்மட்டத்தை திருப்திப்படுத்துவதற்காக, 12 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்வதற்கு உத்தரவிட்டிருந்தால், அவர் மீது சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாங்கள் போர் வீரர்களைத் தான் பாதுகாப்போம், குற்றவாளிகளை அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!