இந்தோனேசிய கனமழை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரிப்பு!

இந்தோனேசிய நாட்டில், கனமழை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்திருக்கிறது. 70க்கும் மேற்பட்டோரை காணவில்லை என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை அறிவித்திருக்கிறது. அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா((Papua )) மாகாணத்தில், வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்ததால், பெரும்பாலான இடங்கள் வெள்ளநீரில் மிதந்தன.. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தோடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

முழுவீச்சில், மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ள இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை, கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆறுகளுக்குள் சட்டவிரோதமாக வீடுகளை கட்டி குடியிருந்தோரில் பலர் உயிரிழந்திருப்பதாகவும், பேரிடர் முகமை கூறியிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!