கிழக்கில் முடங்கிய தமிழ்ப் பகுதிகள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள், இன்று காலை முதல் செயலிழந்தன.

இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை. அரச அலுவலகங்கள், அரச, தனியார் வங்கிகளும் இயங்கவில்லை. மேலும், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.போக்குவரத்து சேவைகள் பெரும்பாலும் இயங்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!