பிரசவத்தில், சிசுவின் தலையை துண்டாக வெளியே எடுத்த தாதி: தீவிர முயற்சிக்குப் பின்னர் உடலை எடுத்த வைத்தியர்கள்

இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தாதியொருவர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரச்சினை எதுவும் இல்லை என கூறிய அவர், சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் தலை திரும்பியதும், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது. உடல் தாயின் கருப்பையில் சிக்கிக்கொண்டது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு வைத்தியர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். இருப்பினும், தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!