மொசம்பிக் நாட்டில் புயல் , வெள்ளத்தால் 1000 பேர் உயிரிழப்பு.

புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை இடை என்ற புயல் கடந்த வியாழக்கிழமை மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்து கிடக்கின்றன. மரங்கள், மின் கம்பங்கள் அனைத்தும் விழுந்துள்ளன. தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்ததால் சேவை துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிளை ஆய்வு செய்த அதிபர் பிலிப் நையுசி, ஆறுகள் உள்ளிட்ட பல இடங்களில் சடலங்கள் மிதப்பதால், பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் வெள்ளம் வடியாமல் இருப்பதால் ஏறத்தாழ 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் உலக நாடுகள் உதவ வேண்டும் என ஐநா சபையின் உலக உணவுத் திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இடை புயல் காரணமாக ஆப்பிரிக்காவில் பல்வேறு நாடுகளில் 26 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!